இலங்கையில் மீன் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக கடற்றொழில் நீரியியல் வள ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டில் மொத்தமாக 33 ஆயிரம் மெற்றிக் தொன் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் பெறுமதி 390 கோடி ரூபாவாகும்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த கடலுணவின் பெறுமதி நான்காயிரத்து 200 கோடி ரூபாவை தாண்டுவதாக அமைச்சர் கூறினார்.
மீன் இறக்குமதியை குறைப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.