கொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது ஊழியர் ஒருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்களே பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இ.போ.ச. பஸ் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் தனியார் பஸ் சாரதி ஒருவர் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.