சிறைக்கைத்திகள் மீதான தாக்குதல் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குக – தலதா

187 0

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்கைதிகள்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த மூன்றுபேர் அடங்கிய குழு அமைத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். 

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களுக்கு சித்திரவதை மேற்கொண்டுள்ளதாக  ஊடகங்களில் பரவலாக தெரிவிக்கப்பட்டு வருக்கின்றது.

அதனால் இந்த சம்பவம் தொடர்பாக மூன்றுபேர் அடங்கிய குழுவொன்றை நியமித்து, எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Leave a comment