கிதுல்கம பகுதியில் நீராடிக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி

220 0

கிதுல்கம பகுதியில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

நேற்று (15) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

லெல்கொட, உடுபில பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

இதேவேளை திருகோணமலை, சங்கமித்த கடற்கரையில் சுழிக்கு சிக்குண்ட நால்வரை திருகோணமலை பொலிஸார் காப்பற்றியுள்ளனர். 

இவ்வாறு காப்பற்றப்பட்டவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment