தாயகம் திரும்ப முற்பட்ட சகோதரர்கள் இருவர் இந்திய கடலோக கடற்படையினரால் கைது

288 0

தமிழகத்தில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இருவரை இந்திய கடலோக கடற் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இந்திய கடலோக கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நபர்கள் இராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு படகில் சென்று கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடலோக கடற்படையினர் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ரோர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்ணாடி இழைப்படகில் இருவர் பயணிப்பதை அவதானித்த கடற்படையினர் குறித்த இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சகோதரர்களான சிவராஜா மற்றும் அன்பு குமரன் என தெரிய வந்துள்ளது.

குறித்த இருவரும் இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு படகு மூலம் அகதிகளாக இந்திய தமிழகத்திற்குச் சென்றதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை இந்திய கடலோக கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment