நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் படையினரால் மீட்பு!

231 0

நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவிலிருந்து கடலுக்கு தொழிலிற்காகச் சென்ற 11 மீனவர்கள் இயந்திர கோளாறு காரணமாகத் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

குறித்த 11 பேரையும் அழைத்து வந்த கடற்படையினர் அவர்களை கிளிநோச்சியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர். 

அங்குக் குறித்த மீனவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை இந்திய துணைத் தூதரகத்தினர் வழங்கினர்.

குறித்த 11 பேரையும் கிளிநோச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தி அடுத்தகட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளைக் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த தம்மை கடற்படையினர் மீட்டுள்ளதாகவும், அவர்கள் தமக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment