சிவனொளிபாதமலைக்கு போதை பொருளை கொண்டு சென்ற இளைஞர்கள் கைது

210 0

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருளைக்  கொண்டு சென்ற 15 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் குற்ற தடுப்பு பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர். 

இந்த கைதானது, நேற்று இரவு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

சிவனொளிபாத மலைக்கு சென்ற இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் வட்டலை தியகல பகுதியில் மேற்கொள்ளபட்ட விஷேட சுற்றிவலைப்பின் போது கேரள கஞ்சா, ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பிலேயே குறித்த இளைஞர்கள் கைது செய்யபட்டதாக ஹட்டன் குற்ற தடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யபட்டவர்கள் கொழும்பு, மாத்தறை, காலி பகுதிகளை சேர்ந்த 20 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் என ஹட்டன் பொலிஸ் வலைத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யபட்ட 15 சந்தேக நபர்களும் இன்று ஞாயிற்றுகிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதாக ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

Leave a comment