தந்தையைக் கொடூரமாக கொலை செய்த மகன் பொலிஸில் சரண்

204 0

தன் தந்தையை கத்தியொன்றினால் வெட்டியும், குத்தியும், கோரமாகக் கொலை செய்த மகனை சியாம்பலாண்டுவைப் பொலிஸார்  இன்று கைது செய்துள்ளதுடன், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சியாம்பலாண்டுவைப் பகுதியின் தொம்பகாவெலையைச் சேர்ந்த டி.ஜி.கொர்னேலிஸ் என்ற 96 வயது நிரம்பிய முதியவரே இவ்வாறு அவரது மகனால்   வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை குறித்து சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவிற்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி தகவலையடுத்து விரைந்த பொலிஸார் இரத்த வெள்ளத்தில் கிடந்த கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை மீட்டனர்.

இதே வேளை கொலை செய்யப்பட்டவரின் மகன்ர தானே தனது தந்தையை கொலை செய்ததாகத் தெரிவித்து பொலிஸாரிடம் சரணடைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் விசாரணைக்குற்படுத்தப்பட்ட போது குறித்த தந்தைக்கும் மகனுக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றவே ஆத்திரமுற்ற மகன்ர கத்தியொன்றினால் குறித்த தந்தையை தாக்கி கொலை செய்தமை தெரியவந்துள்ளதாக சியாம்பலாண்டுவைப் பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து இச்சடலம் குறித்து நீதி மன்ற  விசாரணையும், சட்ட வைத்திய பரிசோதனையும் இன்றும் நாளையும் இடம்பெறலாமென பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment