பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு அனைத்து தொழிற்சங்களும் ஒத்துழைக்க வேண்டும்-சுரேஷ்

227 0

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு மலையகத்தின் அனைத்து தொழிற்சங்களும் ஒத்துழைக்க வேண்டியது கட்டாயமானது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். 

தற்போது சிலர் கைச்சாத்து இடும் தொழிற்சங்கங்கள் மாத்திரம் தான் சம்பள உயர்வு பற்றி பேச வேண்டும், எங்களுக்கு தெரியாது, அவர்கள் தான் அதற்கு எல்லாம் பொறுப்பு என்று சொல்ல வேண்டும் என்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் எனவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். 

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இன்று (11) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பெருந்தோட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சங்ககளும் தொழிலாளர்களின் நலன்சார் விடயங்கள் உட்பட தொழில் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே ஆரம்பிக்கபட்டன. அவைகள் தொழிலாளர்களிடம் இருந்து சந்தாவையும் பெற்று வருகின்றனர். அரசியலையும் நடாத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இவர்கள் தொழிலாளர்கள் சார்பான வேலைகளையும் உரிமைகளையும் பெற்று கொடுக்க வேண்டியதும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஒத்துழைக்க வேண்டியதும் கட்டாயமானது. இந்நிலையில் இவர்கள் எங்களிடம் பொறுப்பு என்று தப்பித்துக் கொள்ளவும் முடியாது. 

தற்போது பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு 3 வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்ததிற்கு முன் வந்து முதல் வருட சம்பள அத்கரிப்பு 625 ரூபாவும் இரண்டாம் வருடம் சம்பள அத்கரிப்பு 650 ரூபாவும் மூன்றாம் வருடம் சம்பள அதிகரிப்பு 675 ரூபா அதிகரிப்பதாகவும் ஊக்குவிப்பு தொகை 140 ரூபாவும் 80 ரூபா வரவு கொடுப்பனவும் 30 ரூபா விலை கொடுப்னவும் மேலதிகமாக எடுக்கும் கொழுந்திற்கு கிலோ ஒன்றுக்கு 45 ரூபாவும் வழங்க முன் வந்துள்ளனர். 

இது சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின் ஒரு படி உயர்வாக இருந்த போதும். இதற்கு நான் ஒத்துக் கொள்ளவில்லை. இதனை பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் கூறி அவர்களின் முடிவின் படி, அடுத்த கட்டத்திற்கு செல்லாம் என்று என்னி எழும்பி வந்து விட்டோம். இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் முடிவும் அதுவே. 

எது எவ்வாறாயினும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மலையகத்தின் அனைத்து தொழிற்சங்ககளும் ஒன்றினைந்து செயற்பட்டு சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும். இந்நிலையில் தொழிற்சங்கங்கள் முரணாக கருத்து தெரிவிப்பது கவலைக்குரிய விடயமாகும் என்றும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். 

Leave a comment