போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் முல்லைத்தீவில்!

236 0

போதைத் தடுப்பு  தொடர்பான ஜனாதிபதி செயலணியின் முன்னாயத்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்  மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்பு செயலணியின் முதன்மை அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய பொலிஸ் அதிகாரி மஹிந்த குணரத்தின பிரதேச செயலாளர்கள் மற்றும் முப்படை அதிகாரிகள் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் மாவட்ட செயலக அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a comment