பல்வேறு பகுதிகளில் ஹெரோயினுடன் 8 பேர் கைது

207 0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வாழைத்தோட்டம், பதுளை, யக்கல மற்றும் பாணதுறை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மத்திய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் வாழைத்தோட்டம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஒரு சந்தேக நபரிடம் இருந்து 20 கிராம் 840 மில்லி கிராம் ஹெரோயினும் அடுத்த நபரிடம் 2 கிராம் 410 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதேவேளை, பதுளை – பசரை பிரதாக வீதியின் சிறிமல்கொட சந்தியில் ஹெரோயினுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 12 கிராம் 705 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் யக்கல, பெலும்மஹர பகுதியில் 5 கிராம் 560 மில்லி கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாணதுறை வடக்கு சங்கபோ பகுதியில் 2 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயினுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

குறித்த இளைஞனை எதிர்வரும் 16 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு பாணதுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment