அங்கொடயில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

546 0

அங்கொட சந்தியில் இன்று (07) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் யார் என்பது இதுவரையில் அறியப்படாதுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சடலம் தற்பொழுது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment