ஹட்டன் டிக்கோயா நகரில் நேற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சம்பவத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் அதனை நிறுத்திவைத்து விட்டு அருகில் உள்ள நிறுவனம் ஒன்றுக்குச் சென்ற போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனையடுத்து பிரதேச மக்கள் இணைந்து தீயை அனைத்துள்ளனர். இருப்பினும் முச்சக்கர வணடியின் பிற்புரம் பலமாகச் சேதமடைந்ர்ள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.