புலிகளை வைத்து பூச்சாண்டி காட்டுகிறது இராணுவம் -விக்னேஸ்வரன்

262 0

புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தார்கள் என்றால் அது அவர்கள் கடமை என வடமாகாண  முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதை கூட செய்யாது எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் போய் அரசாங்கம் கூற போகும் பதில் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , 

திடீரென்று வந்து மக்களபிமான வேலைகளைச் செய்வதால் இராணுவம் முற்றிலும் மாறிவிட்டது என்று அர்த்தமுமில்லை. 

இராணுவம் பிழையேதும் எத்தருணத்திலும் செய்யவில்லை என்றும் அர்த்தமில்லை. நான் 2013 ஆம் ஆண்டிலிருந்து இராணுவத்தை வெளியேறச் சொல்லி வருகின்றேன். இராணுவம்  தான் பொம்மைகளையும் பொருட்களையும் தந்து இங்கு தரித்து நிற்கப் பார்க்கின்றார்கள்.எனத் தெரிவித்துள்ளார்.

Leave a comment