பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடை மேலும் நீடிப்பு

221 0

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் (Perpetual Treasuries Ltd) மீது மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

நாளை 05ம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கான தடை மேலும் நீடிக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

அதன்படி அந்த நிறுவனத்திற்கு மேலும் ஆறு மாத காலத்திற்கு அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment