வட.மாகாண ஆளுநராக மார்ஷல் பெரேரா

193 0

வட. மாகாண ஆளுநராக மார்ஷல் பெரேரா இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இதற்கமைய தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வட. மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார். அதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக அசாத் சாலி நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a comment