பெற்றோலியக் கூட்டுத்தாபன துப்பாக்கி பிரயோகம் ; பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

4600 0

தெமட்டகொடையில் அமைந்துள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸாரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பொலிஸாரை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்த தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதோடு இச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Leave a comment