மர்மமாக உயிரிழந்தவரின் சடலம் மீட்பு

506 0

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மந்தலுவ பகுதியில் நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

60 வயதுடைய சாந்த சுபசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment