கோத்தா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார்-டெலிகிராவ்

181 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக காணப்படுகின்ற போதிலும் அவர் தேர்தலில் போட்டியிடமாட்டார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

தனது பிரஜாவுரிமையை இரத்துச்செய்யுமாறு கோரி அமெரிக்க அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளதன் காரணமாக கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடமாட்டார் என ராஜபக்ச குடும்ப தகவல்கள் தெரிவித்தன என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது

நான் அறிந்தவரையில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எதுவும் கோத்தபாய ராஜபக்சவிற்கு இல்லை என ஒருவர் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள கொழும்பு டெலிகிராவ் தான் தேர்தலில் போட்டியிடுவேன்  என கோத்தபாய பலரை நம்பவைத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார் என செய்தி வெளியிட்டுள்ளது

வர்த்தகர்கள் அவரிற்கு நாளாந்தம் பெருமளவு பணத்தை வழங்குகின்றனர்  இதன் காரணமாகவே கோத்தபாய ராஜபக்சவினால் கொழும்பில் ஆடம்பர வாழ்க்கை வாழமுடிகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்வதற்காக வர்த்தகர்கள் தொடர்ச்சியாக பணத்தை வழங்குகின்றனர் என ராஜபக்ச குடும்பத்த சேர்ந்த வட்டாரங்கள் தெரிவித்தன எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக காணப்படுகின்ற போதிலும் அவர் தேர்தலில் போட்டியிடமாட்டார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

தனது பிரஜாவுரிமையை இரத்துச்செய்யுமாறு கோரி அமெரிக்க அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளதன் காரணமாக கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடமாட்டார் என ராஜபக்ச குடும்ப தகவல்கள் தெரிவித்தன என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது

நான் அறிந்தவரையில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எதுவும் கோத்தபாய ராஜபக்சவிற்கு இல்லை என ஒருவர் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள கொழும்பு டெலிகிராவ் தான் தேர்தலில் போட்டியிடுவேன்  என கோத்தபாய பலரை நம்பவைத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார் என செய்தி வெளியிட்டுள்ளது

வர்த்தகர்கள் அவரிற்கு நாளாந்தம் பெருமளவு பணத்தை வழங்குகின்றனர்  இதன் காரணமாகவே கோத்தபாய ராஜபக்சவினால் கொழும்பில் ஆடம்பர வாழ்க்கை வாழமுடிகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்வதற்காக வர்த்தகர்கள் தொடர்ச்சியாக பணத்தை வழங்குகின்றனர் என ராஜபக்ச குடும்பத்த சேர்ந்த வட்டாரங்கள் தெரிவித்தன எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

Leave a comment