பொகவந்தலாவ வேன்விபத்து,16பேர் வைத்தியசாலையில்

210 0

பொகவந்தலாவ பெற்றசோ தோட்டபகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 16பேர் பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தானது நேற்று மாலை 03மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இரத்தினபுரி அப்புகஸ்தன பகுதியில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி பயனித்த குறித்த வேண் வண்டி பொகவந்தலாவ பலாங்கொட பிராதான வீதியின் பெற்றசோ பகுதியிலேயே விபத்துக்குள்ளாகியுது.

குறித்த வேன் வண்டியில் தடையாளி கோளாரு காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் உட்பட் மொத்தம் 16பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி பகுதியில் இருந்து  அட்டன் பகுதிக்கு கிருஸ்த்தவ ஆலயம் ஒன்றிற்க்கு சென்ற வேன் வண்டியே  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 16பேரும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் காயமடைந்தவர்கள் குறித்து கவலை படவேண்டிய அவசியம் இல்லை என  பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment