பிளாஸ்டிக் பயன்படுத்த தடை- பஸ் நிலையத்தில் கலெக்டர் அதிரடி

281 0

பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பஸ் நிலையத்தில் கலெக்டர் வினய் அதிரடி சோதனை நடத்தினார்.

தமிழகத்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மற்றும் உற்பத்தி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து மக்காத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து அரசு உத்தர விட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது குறித்து சில மாதங்களுக்கு முன்பிருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் சில கடை உரிமையாளர்கள் தாங்களாகவே பிளாஸ்டிக் பொருட்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மாவட்டம் முழுவதும் இதன்மூலம் 100 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கலெக்டர் வினய் பஸ் நிலையம், பூமார்க்கெட், பிரபல ஜவுளிகடைகளில் அதிரடி சோதனை நடத்தினார். பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றுப்பொருட்கள் பயன் படுத்த அறிவுறுத்தினார்.

மேலும் அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவுப்பு பலகை வைக்கவும் உத்தரவிட்டார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் வாழை இலை விலை திடீரென விலை உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் ஓட்டல் கடைக்காரர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இலைகளில் கழிக்கப்படும் பகுதி கூட தற்போது ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிறிது காலத்தில் இது பழக்க மாகிவிடும். மேலும் பொது மக்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a comment