போதைப் பொருளை ஒழிக்க பெற்றோர்களின் உதவி தேவை- ரவி

247 0

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து காப்பற்ற பெற்றோர்களின் உதவி அவசியமானது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த விடயங்கள் தொடர்பில் பெற்றோர்கள் தங்களுக்கு தெரிந்த விடயங்களை அதிகாரிகளிடம் அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a comment