வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் 1 கிலோ கிராம் 513 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை கொழும்பு ஊழல் சுற்றிவளைப்பு பிரிவினரால் நேற்று வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இளைஞன் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 38 வயதுடைய இல 214 ,ஏ, முகத்துவாரம் , மொறட்டுவை பகுதியை சேர்ந்த குமார பிட்ட விதானலாகே சுரங்க தினேஷ் பெரேரா எனப்படுபவரென விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேற்படி சந்தேக நபரிடமிருந்து சுமார் 18 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோகிராம் 513 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை – கொழும்பு ஊழல்சுற்றிவளைப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.