களுத்துறை வடக்கு, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி வீதி, தொட்டுபல சந்திக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு 10.35 மணியளவில் கார் ஒன்றில் வந்த இருவரால் ஹோட்டல் ஒன்றுக்கு எதிரில் உள்ள வீதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக காணப்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


