போலி கஜமுத்துக்களுடன் இருவர் கைது!

242 0

போலி ஏழு கஜமுத்துக்களை ஒன்றரைக் கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர் மகியங்கனைப்பொலிஸாரால் இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி கஜமுத்துக்கள் குறித்து மகியங்கனைப் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கவே பொலிஸார்  மாற்றுடையில் கஜமுத்துக்களை கொள்வனவு செய்பவர்கள் போன்று கஜமுத்துக்கள் விற்பனை செய்பவர்களிடம் சென்றனர்.

அங்குச் சென்ற பொலிஸார் கஜமுத்துக்களை விலைபேசி பணத்தைக் கொடுக்கும் போது கஜமுத்துக்களை விற்பனை செய்த இருவரைக் குறிப்பிட்ட கஜமுத்துக்களுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் மகியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment