ஹெரோயினுடன் இளைஞர் கைது

170 0

தெமட்டகொடை  – ஞானவிமல மைதானத்திற்கு  அருகாமையில்  ஹெரோயின் போதைப் பொருளுடன்  இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வருடத்தின் இறுதி நாளான நேற்று  பிற்பகல் 1.45 மணியளவில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்  31 வயதுடைய தெமடகொடை பகுதியை சேர்ந்தவர் என  விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.  அவரிடமிருந்து 3 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருட்களை  பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். 

மேலும்  இன்றைய தினம் சந்தேக நபரை  மேல்மாகாண ஊழல் தடுப்பு பிரிவினரால் மாளிகாகந்தை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் குறித்த மேலதிக விசாரணைகளையும்  மேல்மாகாண ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். Share

Leave a comment