அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன பிணையில் விடுதலை

167 0

பெப்பர்ச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரையும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியையும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

பெப்பர்ச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளரான கசுன் பலிசேன ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தலா ஒரு பில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 2 பில்லியன் ரூபா 4 சரீரப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

வெளிநாடு செல்வதற்கு இருவருக்கும் தடைவிதித்துள்ள நீதிமன்றம் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகி கையொப்பமிடுமாறும் பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment