சண்.குகவரதனுக்குப் பிணை

197 0

72 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினருமான சண்.குகவரதனையும் அவரது மனைவியையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த இருவரையும நேற்றைய தினம் சி.ஐ.டி.யினர் கல்கிஸை மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் அவர்களை 25 மில்லியன் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதியளித்தார்.

அத்­துடன் இரு­வரின் கட­வுச்­சீட்­டு­க­ளையும் நீதி­மன்ற பொறுப்பில் எடுக்க உத்­த­ர­விட்ட நீதிவான், அவர்­க­ளது வெளி­நாட்டு பய­ணங்­க­ளையும்  பிணை கையெ­ழுத்­திட்ட மூவரின் வெளி­நாட்டுப் பய­ணங்­க­ளையும் தடை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.Share2

Leave a comment