அதிவேக வீதியில் வருமானம் அதிகரிப்பு

235 0

இம்மாதம் 20 ஆம் திகதியிலிருந்து  இன்றுவரை  தெற்கு அதிவேக வீதி மற்றும் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதி, ஆகிய இடங்களில் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் 100,000 வாகனங்கள் அதிவேக வீதியில் பயணிப்பதாக வீதி மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும்  வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் அதிக வாகனங்கள் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுவரைக்கும் 1,20,000 மேற்பட்ட வாகனங்கள் பயணித்திருக்கிறது. இதன் மூலம் கிடைத்த வருமானம் 32 மில்லியன் என அதிவேக வீதியின் அதிகாரி தெரிவித்துள்ளார். 

கடந்த நத்தார் பண்டிகை காலத்தை விட இம்முறை வருமானங்கள்100க்கு 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில், அதிவேக வீதியில்  போக்குவரத்துக்கு 35 சதவீத அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களை விட  இரு அதிவேக வீதி வழிகளிலும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 75,000 என அதன் அதிகாரி தெரிவித்துள்ளார். 

Leave a comment