பாடசாலை சீருடைக்கான வவுச்சர் கால வரை பெப்ரவரி 28 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலவரை டிசம்பர் 31 ஆம் திகதி வரைதான் மட்டுப்படுத்தபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி பாடசாலை மாணவர்களுக்கான வவுச்சர் கொடுக்கப்பட இருந்த நிலையில் அரசியல் மாற்றத்தினால் தான் குறித்த வவுச்சருக்கான காலவரையரையை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.