நிறைவேற்றப்பட்டது இடைக்கால கணக்கறிக்கை

1762 0

2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு இடைக்கால கணக்கறிக்கையை 102 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று சபையில் முன் வைத்தார். 

அதன்படி குறித்த அறிக்கை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் விடப்பட்டது. இதன்போது  ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கைக்கு தமிழ்த் தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கிய வேளை மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் வாக்கெடுப்பின் போது கலந்துகொள்ளவில்ல‍ை என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a comment