ஹெரோயினுடன் ஒருவர் கைது

324 0

கொழும்பில் இருந்து தங்கொட்டுவைக்கு ஹெரோயினை எடுத்து சென்ற சந்தேக நபர் ஒருவர் இன்று (13) பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவ, வலவ்வத்த பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் 101 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவை சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியுடையவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபரின் குடுப்பத்தினர் இதற்கு முன்னர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சிலாபம் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment