சிறீலங்காவின் தேயிலை உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி

331 0

srilanka_teaharvest_pixinn-net_10 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறீலங்காவின் தேயிலை உற்பத்தி மிகவும் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சிறீலங்காவின் தேயிலைச் சம்மேளனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் சிறீலங்காவின் தேயிலை உற்பத்தியின் வீழ்ச்சி 23 மில்லியன் கிலோவாக வீழ்ச்சியடைந்தது. இது முன்னைய ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 13 சதவீத வீழ்ச்சியாகும்.

2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21.5 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. அதற்குப் பின்னர், இந்த ஆண்டிலேயே தேயிலை உற்பத்தியில் மோசமான சரிவு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் 2016ஆம் ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையிலான மாதகங்களில் தேயிலை உற்பத்தியில் 12 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில், 198.6 மில்லியன் கிலோ தேயிலை மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

குறித்த எட்டு மாதத்திலும் ஒரு மாத தேயிலை உற்பத்தியை சிறீலங்கா இழந்துள்ளது.