தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு முயற்சிகள் கூட்டிணைக்கப்பட வேண்டும்-மனோ

285 0

சிறுபான்மை கட்சிகள் கூட்டாக பேசி செயற்பட வேண்டும் என்ற கருத்தை நண்பர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். இதை நான் வரவேற்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ மேலும் குறிப்பிடுகையில், உண்மையில் தமிழ் கட்சிகளின், தமிழ் பேசும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டம் கட்டமாக ஒன்றாக அமரும் ஒரு அமைப்பு (Caucus of MPs) உருவாக்கப்பட வேண்டும் என இரண்டு வருடங்களுக்கு முன்னமேயே நான் சொன்னதை இந்நாட்டு தமிழ் பேசும் மக்கள் அறிவார்கள். அது அப்போது பல காரணங்களால் நிறைவேறவில்லை.

இப்போது ஜனாதிபதி மைத்திரிபாலவின் குளறுபடிகள் காரணமாக அந்த யோசனை கூடிவரும் காலம் கனிந்துள்ளது. இன்றைய தேசிய நெருக்கடியில் சிறுபான்மை கட்சிகள் காத்திரமாக பணியாற்றியதை தமிழ், முஸ்லிம் மக்கள் அறிவார்கள்.

சிறுபான்மை கட்சிகளின் கூட்டு முயற்சி தேசிய நலன்களை அடிப்படையாக கொண்டதாகும் என்பதையும், இது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதையும் நாம் உரக்க எடுத்து கூறவேண்டும்.

Leave a comment