நாளையும் மூடப்படும் பாராளுமன்ற கலரி

253 0

பாராளுமன்றம் நாளை புதன்கிழமை 10.30 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இந்நிலையில் நாளையதினமும் பாராளுமன்ற அமர்வின் போது பொதுமக்கள் கலரி மற்றும் விசேட விருந்தினர் பார்வையாளர் கூடம் ஆகியன மூடப்படுமென பாராளுமன்ற படைக்கல சேவிதர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற கலரியில் ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment