ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்

259 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

 

ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான திலின தென்னக்கோன் என்பவரே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். இவர் ஜனக பண்டார தென்னக்கோனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இணைந்துகொண்டுள்ள திலின தென்னக்கோன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

Leave a comment