ஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

261 0

மருதானை, அபேசிங்காராம வீதியில் ஐஸ் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய கொழும்பு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மோட்டார் வாகனம் ஒன்றை சோதனையிட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரிடம் இருந்து 109 கிராம் 760 மில்லிகிராம் ஐஸ் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெமடகொட பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment