இலங்கையில் ஏற்படும் மாற்றங்களிற்கு ஏற்ப பதில் நடவடிக்கை எடுப்பதற்கு பிரிட்டன் தயார்

278 0

மாறிவரும் சூழலிற்கு ஏற்ப பதில் நடவடிக்கையை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவ்வாறான நடவடிக்கையை எடுப்பதற்காக சிவில்சமூகத்தவர்கள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம் எனவும் பிரிட்டனின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவிப்பதாக தெரிவித்துள்ள பிரிட்டன் தற்போதைய சூழ்நிலையால் மனித உரிமை ஆர்வலர்களிற்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளிற்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் தரீக்

அகமட் இதனை தெரிவித்துள்ளார்.

மனித உரிமை நிலரவம் முக்கியமானதாக உள்ள 30 நாடுகள் குறித்த இடைக்கால அறிக்கையொன்றை வெளியிட்ட பின்னரே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்

நல்லாட்சி சட்டத்தின் ஆட்சி  மனித உரிமைகள் ஆகியவற்றை பாதுகாத்து  ஊக்குவிக்கவேண்டியதன் அவசியத்தை அனைத்து தரப்பினருக்கும் தெரிவித்துள்ளோம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

மாறிவரும் சூழலிற்கு ஏற்ப பதில் நடவடிக்கையை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவ்வாறான நடவடிக்கையை எடுப்பதற்காக சிவில்சமூகத்தவர்கள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம் எனவும் பிரிட்டனின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment