மனைவியை கத்தியால் தாக்க முயன்ற இராணுவவீரர் !

223 0

மாமியாரை கத்தியினால் தாக்கிய இராணுவவீரரான மருமகனை மெதகமை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

 

கத்தியினால் தாக்கப்பட்ட 74 வயதுடைய வயோதிபப் பெண்ணான மாமியார் ஆபத்தான நிலையில் மொனராகலை அரசினர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, மெதகமைப் பொலிசார் குறிப்பிட்ட வயோதிப பெண்ணின் மருமகனான இராணுவவீரரைக் கைதுசெய்துள்ளதுடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியொன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

இராணுவவீரர் மது போதையுடன் வீடு வந்து தன் மனைவியைத் தாக்குவதற்கு முற்பட்ட வேளையில் அதைத் தடுக்க மனைவியின் தாய் முற்பட்ட போது அவர் தாக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a comment