சபாநாயகர் சர்வாதிகாரி எனவும், பாராளுமன்ற நிலையியல் கட்டளையை மீறி செயற்பட்டு வருகின்றார் என மஹிந்த அணியினர் குற்றம் சுமத்திவருகின்ற நிலையில் சபாநாயகரின் செயற்பாடுகள் நேர்மையானதே என நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ச்சியாக அரசியல் அமைப்பினை மீரியவறாகிவிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட கருத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.