சிறுபான்மை மக்களுக்கு துன்பங்களை ஏற்படுத்தியவர்களுக்கே ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சுப்பதவிகளை வழங்கியுள்ளார்.
அதனால் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கி நல்லாட்சியை தொடர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர் வே. இராதா கிருஷ்ணன் தெரிவிதார்.
பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெவிக்கையில்,
மலையத்தில் பெருந்தோட்ட மக்கள் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை கோரி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் நியாயமானதுதான்.
ஆனால் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு பெற்றுத்தருவதாக 2015க்கு முன்னர் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர் மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற நோக்கில் அந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதியாகும்.
முதலாளிமார் அதனை வழங்க இணங்குவார்கள் என்பது சந்தேகமாகும். அதனால் பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபா அல்லது அதற்கு நிகரான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றாக செயற்படவேண்டும்.
எனவே மக்கள் ஆணையில் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்கி நல்லாட்சியை தொடர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.