இந்த வருடத்தில் 1500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

333 0

karunasena-palaly-240716-seithy-1யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இந்த வருடம் 1500 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 3500 மில்லியன் ரூபா நிதியில் வீட்டுத்திட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வீட்டுத்திட்டத்தின் அடிப்படையில் இதுவரையில் 48 வீடுகள் முடிவடைந்துவிட்டன.

3 ஆயிரத்து 565 வீடுகள் ஒக்டோபர் மாதம் நிறைவு செய்ய வேண்டியுள்ளது.

ஆயிரத்து 423 வீடுகள் முடிவுறும் நிலையில் உள்ளன.

ஏனைய வீடுகள் அடுத்த வருட இறுதிக்குள் முடிவுறுத்தப்படும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.