என்னை தாக்கியது மொட்டு கட்சி உறுப்பினரே! -கொட்டாவே ஹேமலோக தேரர்

217 0

மஹரகம, சுதர்ஷனாராம விகாரையின் தேரர் கொட்டாவே ஹேமாலோக மீது கடந்த முதலாம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

தாக்குதலுக்குள்ளான தேரர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந் நிலையில் தேரர் தன்னை தாக்கியவர் மொட்டு கட்சியின் உறுப்பினரும்  மஹரகம நகர சபையின் உறுப்பினருமான நிஷாந்த விமலச் சந்திரன் என தெரிவித்துள்ளார்.

முதலில் நிஷாந்த மட்டும் தகாத வார்த்தைகளை பிரயோகித்து தாக்கியதாகவும் பின்னர் அவரோடு ஏறக்கறைய 30 பேர் சேர்ந்து கொண்டதாகவும் தெரவித்தார்.

விகாரையின் தனது அறைக்கு வந்தவர்கள் தொலைபேசி மற்றும் ஏனைய பொருட்களை உடைத்து நொறுக்கியதோடு நீதி மன்ற உத்தரவின் பேரிலேயே தாம்; இதை செய்வதாகவும் மிரட்டியுள்ளனர்.

தன்னை தாக்கும் காட்சிகளை தேரர் தனது கைத்தொலைப் பேசியில் பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

குறித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.

Leave a comment