பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

271 0
அம்பலாங்கொடை, வதுகெதர பகுதியில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வதுகெதர, ஆதாதொல பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள், மோட்டார் வாகனம், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மொரன்துடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment