பிற்போடப்பட்டது முக்கிய சந்திப்பு !

260 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையில் இடம்பெறவிருந்த முக்கிய சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என கூறப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே இச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

அதற்கமைவாக இந்த சந்திப்பானது நாளைய தினம் இரவு 8.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் மனோகணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment