ஹெரோயினுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

251 0

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞரை இன்று கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கல்கிஸ்ஸை செம்பரன்கொடுவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை மோசடி தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக குறித்த இளைஞர் 2 கிராம் 80 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment