பேருந்து கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

284 0

பேருந்து கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில் நாளை (03) தீர்மானிக்க உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் நாளை நடைபெற உள்ள கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் டீசலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்ட நிலையில், மீண்டும் கடந்த 15 ஆம் திகதி டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இதனடிப்படையில், ஒரு மாதத்திற்குள் டீசலின் விலை 17 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

Leave a comment