யாழில் போக்குவரத்திற்கு ஆபத்தாக மாறியுள்ள வீதி

310 0

யாழ்.வடமராட்சி தொண்டைமானாறையும், அச்சுவேலி இடைக்காட்டையும் இணைக்கும் வீதியை மூடி கடல் நீர் தேங்கி நிற்கின்றது. தொடர் மழையையடுத்து கடல் நீர் பெருக்கெடுத்துள்ளமையால் கடந்த சில நாட்களாக இந்த நிலைமை நீடிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த வீதியில் வீதி விளக்குகளும் இல்லை.இதன் காரணமாக இரவு வேளைகளில் குறித்த வீதியால் பயணிப்போர் மேற்படி வீதியை இனம் காண்பதே பெரும் சிரமமாகவுள்ளது.

இதனால் இந்த வீதியால் போக்குவரத்துச் செய்வோர் தினமும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுப்பதுடன் ஆபத்தானதொரு பகுதியாகவும் இருந்து வருகின்றது.

குறித்த வீதியின் தற்போதைய நிலைமையைப் பொறுப்பு வாய்ந்தவர்கள் கவனத்திலெடுத்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனப் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a comment