ஐ.ம.சு. கூட்டமைப்பால் பிரேரணையை நிறைவேற்றவோ, தோற்கடிக்கவோ முடியாது-சாகல

557 0

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தாலும் அவர்களால் ஏதேனுமொரு பிரேரணையை முன்வைத்து அதனை நிறைவேற்றிக்கொள்ளவோ, அல்லது பிரிதொரு தரப்பினரால் கொண்டு வரப்படும் பிரேணையை தோல்வியடையச் செய்யவோ முடியாது என  ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் தவிர்ந்த 224 பாராளுமன்ற உறுப்பினர்களில் 122 பெரும்பான்மை எம்மிடம் காணப்படுகின்றது. மீதமுள்ள 102 உறுப்பினர்களைக் கொண்டு ஆளுங்கட்சியினரால் அரசாங்கத்தையும் கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a comment