ஹெரோயினுடன் மூவர் கைது

301 0

பதுளை, ஜயகம பகுதியில் ஹெரோயின் விற்பனை செய்த ஒருவரும் ஹெரோயின் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (29) பதுளை பொலிஸாரினால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

28, 23 மற்றும் 22 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 3 இலட்சம் ரூபா பெறுமதியான 4018 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment